For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூன் 1 முதல் விப்ரோ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: ஆனால்...

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ தனது ஊழியர்களுக்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ தகுதியான ஊழியர்கள் மற்றும் சிறப்பாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு அளிக்க உள்ளது.

Pay hike for Wipro techies from June 1

இது குறித்து விப்ரோ நிறுவனத்தின் ஹெச்.ஆர். பிரிவு தலைவர் சவுரப் கோவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சராசரியாக 9.5 சதவீதமும், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வும் அளிக்கப்படும். சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

எத்தனை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும், எத்தனை பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் இந்தியாவில் பணிபுரிகின்றனர் என்ற தகவலை சவுரப் வெளியிடவில்லை.

English summary
Software major Wipro Ltd is increasing salaries for its eligible employees and rewarding high performers with more pay from June 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X