பாஜக ஆட்சியில் தனிநபர் சராசரி வருமானம் 45சதவிகிதம் அதிகரிப்பு : மத்திய புள்ளியியல் துறை
இந்தியாவில் 2017-2018 நிதியாண்டில் தனி நபர் சராசரி வருமானம் ரூ.1, 12, 835 ஆகவும் 2018-2019ம் நிதியாண்டில் ரூ.1, 25, 397 ஆகவும் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து இருப்பதாக மத்திய புள்ளியியல் துறை தெரி
டெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் தனி நபர் வருமானம் 45% அதிகரித்து உள்ளதாக புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம் 2 மடங்காக அதிகரித்து இருப்பதாகவும் மத்திய புள்ளியியல் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-2018 நிதியாண்டில் தனி நபர் சராசரி வருமானம் ரூ.1, 12, 835 ஆகவும் 2018-2019ம் நிதியாண்டில் ரூ.1, 25, 397 ஆகவும் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து இருப்பதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2015-16ஆம் ஆண்டில் நமது நாட்டில் தனி நபர் வருமானம் 94 ஆயிரத்து 130 ரூபாய் ஆக இருந்தது. இது 2016-17ஆம் நிதியாண்டு மதிப்பீட்டின்படி 1 லட்சத்து 3 ஆயிரத்து 219 ரூபாயாக அதிகரித்தது. அதற்கு முந்தைய ஆண்டு தனி நபர் வருமானம் 7.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது.
நான்காண்டில் வளர்ச்சி
கடந்த 2011-2012ம் நிதியாண்டில் தனி நபர் சராசரி வருமானம் ரூ. 63, 462 இருந்தது. இது 2012-2013ம் நிதியாண்டில் தனி நபர் சராசரி வருமானம் ரூ. 70,983 ஆகவும் 2013-2014ம் நிதியாண்டில் ரூ.29,118 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2014-2015,2015-2016 மற்றும் 2016-2017ம் நிதியாண்டுகளில் தனி நபர் சராசரி வருமானம் முறையே ரூ.86,7647, ரூ. 94,731 மற்றும் ரூ.1,03,870 ஆக அதிகரித்து இருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
நாட்டின் பொருளாதாரம்
தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற பிறகான 4 ஆண்டுகளில் தனி நபர் வருமானம் 45% அதிகரித்து உள்ளதாக புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.2% ஆக உயரும் என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தனி நபர் வருமானம்
தனிநபர் வருமானம் அதிகரிப்பது, ஒரு நாட்டின் செல்வ செழிப்பிற்கான அறிகுறி ஆகும். தமிழகத்தில், 2011 - 12ம் நிதியாண்டில், தனிநபர் வருமானம், 1 லட்சத்து, 3,600 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால், 2017 - 18ல், இது, 1 லட்சத்து, 88 ஆயிரத்து, 492 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதன்மூலம், 2011ம் ஆண்டை காட்டிலும், தனிநபர் வருமானம், 85 ஆயிரம் ரூபாய் கூடுதலாகி உள்ளதாக சட்டசபையில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.