சர்வதேச சந்தையில் வீழ்ந்தது கச்சா எண்ணெய் விலை - பெட்ரோல், டீசல் விலையும் குறையும்!
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியையடுத்து, சமையல் கேஸ் மற்றும் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீப காலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 40 டாலராக இருந்தது. கடந்த 1986ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த விலை வீழ்ச்சி காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. இதையடுத்து, சமையல் கேஸ் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக நிறுவனங்களின் லாப விகிதம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.