0% வட்டியில் வங்கிகள் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை
டெல்லி: மொபைல்போன், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற நுகர்வோர் பொருட்களுக்கு 0% வட்டியில் வங்கிகள் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
தீபாவளி, ஆடிப்பண்டிகை போன்ற காலங்களில் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க கடைகள் 0 சதவிகித வட்டியில் கடன் கொடுக்கப்படும் என விளம்பரங்கள் செய்கின்றன.
கடைக்காரர்களுடன் லோன் கொடுக்கும் நிறுவனங்கள் டைஅப் செய்து கொண்டு இந்த திட்டத்தை அறிவிக்கின்றன. கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கி மாத தவணை கட்டுவதற்கு 0 சதவிகித வட்டி என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் வராக்கடன் மற்றும் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், தற்போது திருவிழா காலம் என்பதால், நுகர்வோர் பொருளுக்கு 0 சதவீத வட்டியில் கடன் வழங்கும் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
கார்கள், டி.வி.க்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான மீதான வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது
அதேப்போன்று டெபிட் கார்டில் பொருட்கள் வாங்குவதற்கு கட்டணம் வசூலிப்பதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.