”கூடிய சீக்கிரம் 50 பைசாவும் மியூசியத்தில்தான்” ரிசர்வ் வங்கி செய்தி
டெல்லி: 50 காசு நாணயம் தயாரிப்பு நிறுத்தப்பட போவதாக செய்தி வெளியாகி உள்ளது.
நமது நாட்டில் புழக்கத்தில் இருந்த பெரும்பாலான நாணயங்கள் திரும்பப் பெறப்பட்டு விட்டன.
தற்போது 50 பைசா நாணயத்தையும் திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.
சில்லறை காசு கண்காட்சி:
முன்பு புழக்கத்தில் இருந்த சில்லறை காசுகளை இப்போது நாணய கண்காட்சிகளில் தான் காண முடியும். நீண்ட நாட்களாக மக்களிடம் நடமாடிய 25 காசு நாணயத்தை 2011 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுக்கொண்டது.
நடைமுறை நாணயங்கள்:
தற்போது 50 காசு, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள் நடை முறையில் உள்ளன. இதில் 50 காசு நாணயத்துக்கு மதிப்பு குறைந்து வருகிறது. 50 காசு மதிப்புடைய பொருட்கள் எதுவும் இல்லை. ரூ.1.50 என்றாலும் வியாபாரிகள் 2 ரூபாய் எடுத்துக்கொள்கிறார்கள். 50 காசு இல்லை என்று வாடிக்கையாளர்கள் சொன்னாலும் பல வியாபாரிகள் விட்டு விடுகிறார்கள்.
இப்போலாம் 50 பைசா இல்லாட்டி சாக்லெட்தான்:
50 காசுகளின் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது. பெரும்பாலான பொருட்களின் விலையும், வியாபார நிறுவனங்களின் விலையிலேயே உள்ளன. இதனால் 50 காசுகளை பொது மக்கள் பயன்படுத்துவது இல்லை.
வாங்க மறுக்கும் வியாபாரிகள்:
50 காசு புழக்கம் பெரும்பாலும் குறைந்து விட்டது. பொதுமக்கள் இப்போது 50 காசுகளை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார்கள். வியாபாரிகளும் 50 காசுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது இல்லை. சிலர் வாங்க மறுக்கிறார்கள்.
குறையும் தேவை:
ரிசர்வ் வங்கி இதுவரை 50 காசுகளை செல்லாது என்று அறிவிக்கவில்லை. தொடர்ந்து இவை பயன்பாட்டில் உள்ளன என்றாலும் 50 காசுகளின் தேவை குறைத்து வருகிறது.
விரைவில் வாபஸ் பெறப்படும்:
எனவே 50 காசுகளின் தயாரிப்பை படிப்படியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் 50 காசுகள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.