ஆகஸ்டு மாத சில்லறை பணவீக்க விகிதம் 3.36% ஆக அதிகரிப்பு
ஆகஸ்டு மாதத்தில் சில்லறை பணவீக்க விகிமானது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவான 3.36 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.
டெல்லி: காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து ஆகஸ்டு மாதத்தில் சில்லறை பணவீக்க விகிமானது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவான 3.36 சதவிகித்தை எட்டி உள்ளது.
ஜூலை மாதத்தில் நாட்டின் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 2.36 சதவிகிதமாக இருந்தது. அது, ஆகஸ்ட் மாதத்தில் 3.36 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஐந்து மாதங்களில் காணப்படும் அதிகபட்ச பணவீக்க விகிதமாகும். இது கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிக பட்ச பணவீக்க விகிதமாகும். மார்ச் மாதம் பணவீக்க விகிதம் 3.89 சதவிகிதமாக இருந்தது.
பொருளாதாரத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தை பணவீக்கம். அதுவும் சமீபத்தில் இந்திய பொருளாதாரத்தை ஆட்டிப் படைப்பதும் இப்பணவீக்கம். இது குறித்து மத்திய புள்ளியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
காய்கறிகள் மற்றும் பழங்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வால் சில்லரை பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது. பழங்கள் காய்கறிகள் பணவீக்கம் முறையே 5.29% மற்றும் 6.16% ஆக உயர்ந்துள்ளது. இவை ஜூலையில் முறையே 2.83% மற்றும் மைனஸ் 3.57% என்ற அளவில் இருந்தன.
உடனடி உணவுகள், நொறுக்குத்தீனிகள், இனிப்பு வகைகள், ஆகியவற்றின் பணவீக்கம் 0.43%மாக இருந்து 1.96% இருந்தது. உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், மாமிசம் மற்றும் மீன் ஆகிய மூன்று பிரிவுகளின் பணவீக்கம் முறையே 3.87% 1.03% மற்றும் 2.94% ஆக குறைந்துள்ளன.