For Daily Alerts
Just In
இந்திய பங்குச் சந்தைகளில் செம ஏற்றம்.. சென்செக்ஸ், நிப்டி வரலாற்று உச்சம்
மும்பை: சென்செக்ஸ் வரலாறு காணாத புது உச்சத்தை இன்று தொட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே 37,000 புள்ளிகளை தொட்டது. பங்குச் சந்தை வரலாற்றில் இது புதிய உச்சமாகும்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியும் உயர்வுடனே காணப்பட்டது. இவ்வாண்டில் 14வது முறையாக நிப்டி உச்சத்தை தொட்டது. நிப்டி 40.20 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமான 11,172.2. புள்ளிகளை எட்டியுள்ளது.
பங்குச் சந்தைகளில் காலையிலேயே உயர்வு ஏற்பட்டுள்ளது, முதலீட்டாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள், இந்திய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை உள்ளிட்டவை பங்குச் சந்தை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.
Comments
English summary
Sensex at an all-time high of 37,000; Nifty hits record high for the 14th time in 2018. Nifty climbs 40.20 pts to hit new peak at 11,172.2.
Story first published: Thursday, July 26, 2018, 9:54 [IST]