For Daily Alerts
Just In
எக்ஸிட் போல் எதிரொலி - பங்கு சந்தைகளில் ஏறுமுகம்
டெல்லி, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ளன. இம்மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.
இவற்றில் பாஜக, 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் என்றும் 2 மாநிலங்களில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் இன்று பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது.
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகத்தின் போது 450 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. இதேபோல் தேசிய பங்கு சந்தையான நிஃப்டியும் 145 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 30 பைசா அதிகரித்து இருந்தது.
Comments
English summary
The BSE Sensex surged over 450 points or 2 per cent on Thursday after exit polls predicted the Bharatiya Janata Party (BJP) to emerge as the biggest winner in four key state elections. The 50-share Nifty jumped around 140 points to hit the key 6,300 levels, while the rupee also edged up to 61.76 per dollar.