For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபல கிரிக்கெட் ஸ்டார்களின் ஒரிஜினல் கையெழுத்துடன் oppo F7... செல்போன் உலகில் புது முயற்சி

அந்த மொபைலில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீங்களா? இந்த மொபைல் போன் செல்ஃபி எக்ஸ்பட்ஸ் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் டக்கரான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல்லாருக்கும் கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் இந்தியாவில் இப்பொழுது நடக்கும் ஐபிஎல் மேட்ச்சை பொருத்தவரை வெறிகொண்ட அதன் ரசிகனாக பார்ப்பவர்கள் அதிகம்.

இந்த கிரிக்கெட் மோகம் மற்ற எல்லா விஷயங்களையும் மறக்கடித்துவிடுகிறது. இது தொழில் நுட்பத்தைக் கூட விட்டு வைக்கவில்லை. அதனால் தான் இப்பொழுது OPPO ஒரு புதுவிதமான மொபைல் தொழில் அதனால் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களுடைய வணிகப் பரப்பலை கிரிக்கெட்டையும் கிரிக்கெட் வீரர்களையும் அடிப்படையாக வைத்து செய்யத் தொடங்கி விட்டார்கள்.

அதன் அடிப்படையில் ஒப்போ மொபைல் நிறுவனம் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கண்டிப்பாக இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

அப்படி அந்த மொபைலில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீங்களா? இந்த மொபைல் போன் செல்ஃபி எக்ஸ்பட்ஸ் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் டக்கரான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைல் போன் இந்திய கிரிக்கெட் அணியின் அமோக ஆதரவைப் பெற்று இருப்பது தான் இதன் சிறப்பு அம்சமே.

இந்தியர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை இந்த OPPO நிறுவனம் கண்டிப்பாக தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது என்பது உண்மையே. பாலிவுட் ஸ்டாரான தீபிகா படுகோனே மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா, கிரிக்கெட் வீரர் விராத் கோலி போன்ற பிரபலமான நபர்களைக் கொண்டு தன்னுடைய மார்க்கெட்டிங்கை இந்திய இளைஞர்களின் கவனத்தில் ஈர்த்து வருகிறது.

தற்போது இந்திய கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக OPPO F7 கிரிக்கெட் லிமிடெட் புதிய பதிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபைல் கலெக்ஷனின் ஸ்பெஷலே ஐபிஎல் காய்ச்சலை ஏற்படுத்தும் விதமாக ஹார்டிக் பாண்டியா, அஸ்வின் மற்றும் ரோஹித் சர்மா போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்களின் கையெழுத்துடன் வலம் வருகிறது என்பது தான்.

கண்டிப்பாக இது கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கத் தான் போகிறது. இதன் சிறப்பு அம்சங்கள் அனைத்தும் OPPO F7 போலவே இருக்கும். இனி உங்கள் மனசுக்கு பிடிச்ச ரியல் சாம்பியன்ஸ்களின் கையெழுத்துடன் ஒரு ஸ்டைலிஸ் மொபைல் உங்கள் கையில் பூந்து விளையாடக் போகிறது.

தற்போது மும்பையில் கூட இந்த OPPO நிறுவனம் கிரிக்கெட் விளையாட்டை பலப்படுத்தும் ஒரு நிகழ்வை ஏற்படுத்தி இருந்தது. இதில் 20 இளம் கிரிக்கெட் ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறைய சுற்றுகள் மூலம் அவர்களை தேர்ந்தெடுத்து கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் திறமைகளை இன்னும் மேம்படுத்த அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதலாக பயிற்சியளிக்கப்படுகிறது.

OPPO நிறுவனத்தின் இந்த முயற்சியானது இந்தியாவில் விளையாட்டுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தோடு நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுப் பாதையை திறக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நடிகர்களுடன் சில சிறந்த கிரிக்கெட் கல்விக் கழகங்களில் பயிற்சியளிப்பதற்கு வாய்ப்பளித்து வருகிறது.

இப்பொழுது இந்த OPPO F7 பிராண்ட் அம்பாஸிடர்களாக ரோஹித் ஷர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹார்டிக் பாண்டியா போன்ற கிரிக்கெட் வீரர்கள் முக்கிய தூண்களாக இருந்து வருகிறார்கள். மேலும் இந்திய U-19 கேப்டன் பிரித்வி ஷா தன் இளம் வயதான 5 ஆம் வயதிலேயே கிரிக்கெட் விளையாட்டை ஆர்வமாக விளையாடி வரும் அவர் கண்டிப்பாக மற்ற வீரர்களுக்கும் எடுத்துக்காட்டாக நாளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பவராக திகழ்வார் என்று அந்த நிறுவனம் கருத்து தெரிவிக்கிறது.

OPPO மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தக இயக்குநரான வில் யாங் கூறுகையில் "குழந்தைகள் தான் சமுதாயத்தின் முதுகெலும்பு. எனவே அவர்களின் கனவையும் இலக்குகளையும் அடைய ஒரு சிறந்த வாய்ப்பு இதுவாகும்.

இதை நாம் ஆதரித்து அவர்களை ஒரு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது நமது கடமையாகும். OPPO பிராண்ட் இந்தியாவில் ஒரு திறம்பட பிராண்ட்டாக இருந்து வருவதோடு குழந்தைகள் எந்தத் துறையில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அதற்கான வளங்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம் "என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவில் மட்டும் கிரிக்கெட் ஒரு விளையாட்டு அல்ல. அது ஒவ்வொருவருக்கும் பிடித்தமான மதமாக உள்ளது. நானும் கிரிக்கெட்டில் மிகுந்த அன்பை வைத்துள்ளேன். அதை திறம்பட இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் நிரந்தரமாகச் செய்வேன் என்பதில் ஐயமில்லை. சீன உற்பத்தி பிராண்ட்டான OPPO எப்போதும் கிரிக்கெட் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய முயற்சி.

OPPO வால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சிறிய முயற்சியானது தேசிய கிரிக்கெட் அணியை முன்னெடுத்து செல்லும் விதத்தில் இளம் வீரர்களின் திறமைகளை சிறந்த முறையில் வளர்த்துக் கொள்வதற்கும் உதவும் ஒரு முதன்மையான வெற்றி படியாகும் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X