மர்மமாக கடத்தப்பட்ட 16 வயது சிறுவன்.. கூடவே இருந்து கொன்ற நண்பர்கள்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்
பஞ்சாப்பில் 16 வயது சிறுவன் அவனது நண்பர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
சண்டிகர்: பஞ்சாப்பில் 16 வயது சிறுவன் அவனது நண்பர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் பதின்டா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடத்தப்பட்டு கொல்லப்பட்ட அந்த சிறுவன் 9 ம் வகுப்புதான் படித்து வந்துள்ளான்.
இவன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் பள்ளிவிட்டு பின் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவனது பெற்றோர் போலீசாரிடம் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.
கடத்தினார்கள்
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள், அந்த சிறுவனின் அப்பாவிற்கு மர்ம போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர்கள், உங்கள் பையனை கடத்தி இருக்கிறோம், நீங்கள் மூன்று கோடி கொடுத்தால்தான் விடுவோம் என்று கூறி இருக்கிறார்கள்.
எவ்வளவு
ஆனால் மூன்று கோடி ரூபாய் இல்லை என்று இந்த சிறுவனின் குடும்பத்தில் மறுத்துள்ளனர். பெற்றோர் மறுக்கவே பேரம் பேசி பேசி, கடைசியில் மூன்று லட்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து பதின்டா ரயில் நிலையத்தில் ரயில்வே டிராக்கில் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு பண பையை வைக்க சொல்லியுள்ளனர்.
பொறி வைத்து பிடித்தனர்
இதையடுத்து போலீசார் தூரத்தில் பணம் எடுக்கும் நபர்களை ஒளிந்து நோட்டமிட்டு கண்டுபிடித்துள்ளனர். பணம் எடுத்துக் கொண்டு சென்றவனை பின் தொடர்ந்து சென்று, அவனின் கூட்டாளிகளோடு சேர்த்து கையும் களவுமாக கைது செய்தனர். இந்த நிலையில்தான், கைது செய்யப்பட்ட நபர்கள் எல்லோரும் கடத்தப்பட்ட சிறுவனுக்கு முன்பில் இருந்தே நண்பர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை செய்தான்
விளையாடுவதற்கு கூப்பிட்டது போல கூப்பிட்டு பின் அந்த சிறுவனுக்கு அவனின் நண்பர்கள் மயக்க மருந்து கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், போலீஸ் விசாரணையில்தான், அந்த சிறுவனை கொன்றுவிட்டோம் என்று அவனின் நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கடத்திய முதல் நாளே கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள்.