சுஜித்தை தொடர்ந்து இன்னொரு சோகம்.. ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி
Recommended Video
சண்டிகர்: ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
ஹரியானாவின் ஹர்சிங்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானி (5). இவர் நேற்று வீட்டில் விளையாடி கொண்டிருந்தவர், திடீரென காணவில்லை. பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடினர்.
ஆயினும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் கர்நாலில் உள்ள 50 அடி ஆழ போர்வெல்லில் சிறுமி விழுந்த விவகாரம் இரவு 9 மணிக்கு பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து தேசியபேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
3 வயசு குழந்தைங்க.. தகப்பன் கண் முன்னாடியே பறி போன உயிர்.. கொடூர மாஞ்சா நூல்.. மக்கள் கடுங் கோபம்
சம்பவ இடம்
அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வருகின்றனர். அதற்குள்ளாக உள்ளூர் மக்கள் போர்வெல்லுக்கு பக்கத்தில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டி வருகின்றனர். சிறுமிக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வந்தது. கேமரா மூலம் பார்த்த போது சிறுமியின் கால்கள் மட்டுமே தெரிந்தது.
உயிரிழந்திருக்கலாம்
இந்த நிலையில் சிறுமி தலைகீழாக விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆக்ஸிஜன் கிடைக்காமலும் அச்சத்தாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
|
மீட்பு குழு வேதனை
குழந்தை உயிரிழந்ததால் தேசிய மீட்பு படையினர் வேதனை அடைந்தனர். மீட்பு பணிகள் முடுக்கிவிட்ட நிலையிலும் சிறுமியை உயிரோடு மீட்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
சுஜித்
கடந்த வாரம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் 80 அடி ஆழத்தில் விழுந்தான். சுமார் 5 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.