தாத்தா வயசு.. ஏரியாவுக்கே தாதாவாம்.. 13 வயசு சிறுமியிடம்.. ஒரே கடி.. அலறி துடித்த காமுகன்!
சண்டிகர்: மார்க்கெட்டுக்கு போன பெண்ணை, நடுரோட்டிலேயே தரதரவென இழுத்து கொண்டு போய் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் ஒரு தாத்தா.. அந்த தாத்தா ஏரியா ரவுடியாம்!
பஞ்சாபின் லூதியானாவில் சக் கலான் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் ஒரு சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.. 13 வயசாகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று தன்னுடைய அம்மாவுடன் இவர் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றிருக்கிறார்... கடையில் எல்லாம் வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது 50 வயசு தாத்தா, சிறுமியை பார்த்துவிட்டார்.. பார்த்ததும் காம வெறி மண்டைக்கு ஏறிவிட்டது.. அந்த தாத்தா பெயர் ஆல்பல் சிங்.. அவர் அந்த ஏரியா ரவுடி என்கிறார்கள்.
பிராமணருக்கு கொள்ளி வச்ச முகம்மது ஆசிப்.. இதுதான்டா மனிதம்.. பெங்களூரை நெகிழ வைத்த சம்பவம்!
திடீரென நடுரோட்டிலேயே சிறுமியின் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்றார்.. இதை ரோட்டில் இருந்த அனைவருமே பார்த்து அதிர்ச்சி ஆனார்கள்.. இதை பார்ப்பதற்கு சினிமாவில் வருவதை போலவே இருந்தது.
சிறுமியை இழுத்து சென்ற தாத்தா, ஒரு ரூமில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.. வெறி பிடித்து அலைந்த அந்த தாத்தாவின் கையை சிறுமி, பலமாக கடித்துவிட்டார்.. அந்த வலி தாங்காமல் ரவுடி தாத்தா அலறினார்.. அவர் ஆவென அலறியபோது, கீழே கிடந்த ஒரு துணியை எடுத்து ரவுடி வாயிலேயே திணித்துவிட்டு, அவரிடமிருந்து தப்பி ஓடிவந்து விட்டார்.
இதனிடையே சிறுமியை இழுத்து கொண்டு போவதை பார்த்த அவரது அம்மாவும், பொதுமக்களும் விரட்டி வந்துவிட்டனர்.. மொத்தமாக கூடி, ரவுடி தாத்தாவை துவைத்து எடுத்தனர்.. அதற்குள் தகவலறிந்து போலீசாரும் வந்துவிட்டனர்.. பொதுமக்களிடமிருந்து ரவுடி தாத்தாவை மீட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, மீட்கப்பட்ட சிறுமியை மெடிக்கல் செக்கப் செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி இப்போது நன்றாக இருக்கிறாராம்.. பட்டப்பகலில் மார்க்கெட் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அங்கு ஏற்படுத்தியது.