தீ பிடித்தபடி வேகமாக பறந்த கார்.. பாலத்தின் மீது சென்ற திக் காட்சி.. திகில் வீடியோ!
ஹரியானாவில் பாலத்தின் மேல் தீ பிடித்தபடி சென்ற கார் ஒன்றின் வீடியோ வெளியாகி உள்ளது.
சண்டிகர்: ஹரியானாவில் பாலத்தின் மேல் தீ பிடித்தபடி சென்ற கார் ஒன்றின் வீடியோ வெளியாகி உள்ளது.
ஹரியானாவின் குர்கிராமில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராகேஷ் சந்தேல் என்ற நபரின் கார்தான் இப்படி தீ பிடித்து இருப்பது.
தீபாவளிக்காக தனது உறவினர் வீட்டிற்கு சென்ற நபர் வீடு திரும்பும் போது காரில் ஏதோ கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. சைபர்சிட்டி அருகே செல்லும் போது காரில் இருந்து வித்தியாசமாக சத்தம் வந்துள்ளது.
[இந்த செய்திகளை வாசிப்பது ஏஐ ரோபோட் 1.0.. சீனாவில் வைரல் ஆகும் நியூஸ் - ரீடர் ரோபோட்! - வீடியோ]
தீ பிடித்தது
இதையடுத்து அங்கிருந்த பாலத்திற்கு அருகே காரை நிறுத்தி என்ன பிரச்சனை என்று பார்க்க நினைத்துள்ளார். ஆனால் அவர் பிரேக் பிடித்த சமயத்தில் சரியாக கார் தீ பிடித்துள்ளது. கார் மொத்தமும் தீ பிடித்தபடி நகர்ந்து உள்ளது.
வேகமாக சென்றது
தீ பிடித்த அடுத்த நொடி கார் வேகமாக நகர தொடங்கியது. சிறிது நேரத்தில் வேகம் பிடித்த கார் பாலத்தின் மேல் நகர ஆரம்பித்தது. பாலத்தின் மேல் வேகமாக கார் சென்றுள்ளது.
|
வெளியே குதித்தார்
அதற்குள் சுதாரித்த டிரைவர் காரில் இருந்து கீழே குதித்தார். பின் அந்த கார் முன்னே சென்ற கார் மீது மோதியது. பின் தடுப்பு சுவர் மீது மோதி கடைசியாக நின்றது.
விசாரணை நடத்துகிறார்கள்
இதில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது.