மீண்டும் பாஜக கூட்டணிதான்.. ஹரியானாவில் அழுத்தமாக மலரும் தாமரை.. நியூஸ் 18 கணிப்பு!
நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று நியூஸ் 18 மற்றும் ஐபிசாஸ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.
சண்டிகர்: நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று நியூஸ் 18 மற்றும் ஐபிசாஸ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.
ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது. இங்கு பாஜகதான் ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேதான் பிரதான போட்டியாகும். ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அதிக கவனம் ஈர்க்கிறது.
கடந்த 2014ல் நடந்த தேர்தலில்தான் பாஜக இங்கு முதல்முறை வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து ஹரியானா தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. நியூஸ் 18 மற்றும் ஐபிசாஸ் நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி- அத்தனை எக்ஸிட் போல் முடிவுகளும் திட்டவட்டம்!
அதில், ஹரியானாவில் பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். 10 இடங்களில் மட்டும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும். 5 இடங்களில் மற்ற பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் வெற்றிபெறும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.