சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமிர்தசரஸில் வழிபாட்டுத் தலத்தில் கிரனேட் தாக்குதல்.. 3 பேர் பலி.. 20 பேர் படுகாயம்

பஞ்சாப் அமிர்தசரஸில் வழிபாட்டுத் தலத்தில் நடந்த கையெறி குண்டுத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

அமிர்தசரஸ் அருகே உள்ள அட்லிவால் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ''சாண்ட் நிரன்காரி மிஷன்'' என்ற எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் சாராத அமைப்பு அங்கு வழிபாட்டுக் கூட்டம் நடத்தியது.

Grenade Attack at Prayer Hall in Amritsar kills 3 people

கடவுளை தரிசித்தல் என்ற பெயரில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பை பின்பற்றும் மக்கள் பஞ்சாப்பில் பலர் இருக்கிறார்கள். அதனால் பலர் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளனர்.

இன்று அந்த கூட்டம் நடக்கும் பகுதிக்கு மூன்று பைக்கில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கூட்டத்தை நோக்கி கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். மூன்று பேரும் முகத்தை மூடி இருந்தனர்.

மீண்டும் பரோலில் வருகிறாரா சசிகலா.. மீண்டும் ஒரு பரபரப்பு எதிர்பார்ப்புமீண்டும் பரோலில் வருகிறாரா சசிகலா.. மீண்டும் ஒரு பரபரப்பு எதிர்பார்ப்பு

இந்த தாக்குதல் காரணமாக 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மர்ம நபர்கள் யார், ஏன் குண்டு வீசினர் என்று இன்னும் தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து பஞ்சாப் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Grenade Attack at Prayer Hall in Amritsar kills 3 people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X