கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திய ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ்
சண்டிகர்: கொரோனா தடுப்புக்கான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்கான முதல் தன்னார்வலராக ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர்- பாரத் பயோடெக் ஆகியவை இணைந்து கொரோனாவை தடுக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளன. இதுவரை கோவாக்சின் தடுப்பூசி சோதனை 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
3-வது கட்டமாக ஹரியானாவில் இன்று கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது. அம்பாலா மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் முதல் தன்னார்வலராக ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
#WATCH Haryana Health Minister Anil Vij being administered a trial dose of #Covaxin, at a hospital in Ambala.
— ANI (@ANI) November 20, 2020
He had offered to be the first volunteer for the third phase trial of Covaxin, which started in the state today. pic.twitter.com/xKuXWLeFAB
மொத்தம் 25 மையங்களில் 26,000 தன்னார்வலர்கள் இந்த 3-ம் கட்ட பரிசோதனையில் பங்கேற்கின்றனர்.