ராகுலும், பிரியங்காவும், பெட்ரோல் குண்டை போன்றவர்கள்... பற்ற வைத்துவிடுவார்கள் - ஹரியானா அமைச்சர்
சண்டிகர்: ராகுலும், பிரியங்காவும் பெட்ரோல் குண்டை போன்றவர்கள் என்றும், அவர்கள் எங்கு சென்றாலும் எளிதில் பற்றி எரிவதாகவும் ஹரியானா மாநில பாஜக அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
பாஜக அமைச்சர் அனில் விஜ்ஜின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, காங்கிரஸாரின் கடும் எதிர்ப்புக்கும் உள்ளாகியுள்ளது.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல், பிரியங்கா ஆகியோர் ஆறுதல் தெரிவிக்க செல்லும் நிலையில் அமைச்சர் இந்தக் கருத்தை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிமாக எனக்கும் அச்சம் இருக்கிறது.. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி குறித்து தமிழக அமைச்சர் நிலோபர் கபீல்
பயணம்
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக ராகுலும், பிரியங்கா காந்தியும் நேற்று உ.பி. மாநிலத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களை மீரட்டில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.
பெட்ரோல் குண்டு
இந்நிலையில் ராகுலும், ப்ரியங்கா காந்தியும் பெட்ரோல் குண்டுகளை போன்றவர்கள், அவர்கள் செல்லுமிடமெல்லாம் எளிதில் பற்றி எரிவதாகவும் கூறியுள்ளார். இது காங்கிரஸாரின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. பதிலுக்கு காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் அமித்ஷா பற்றி பதில் கருத்து கூறியுள்ளனர்.
அனில் விஜ்
ஹரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் இதற்கு முன்னரும் பல சர்ச்சையான கருத்துக்களை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம், உள்ளாட்சி, கல்வி என பல முக்கியத் துறைகளை அனில் விஜ் தன் வசம் வைத்திருக்கிறார்.
சேதம்
ராகுல்காந்தியால் பல இடங்களில் கலவரங்கள் தூண்டப்பட்டு பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். அனில் விஜ்ஜுக்கு பதிலடி தரும்வகையில், அவருடைய துறைகள் சார்ந்த விவகாரங்களை கையில் எடுத்துள்ளது ஹரியானா மாநில காங்கிரஸ்.