சுற்றிலும் கமாண்டோக்கள்.. நடுவே மகாராணி போல நடந்து வந்த கங்கனா ரனாவத்.. அடேங்கப்பா பாதுகாப்பு!
சண்டீகர்: மும்பை செல்வதற்காக சண்டீகர் விமான நிலையத்திற்கு வந்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு கமாண்டோக்கள் பாதுகாப்பு புடைச்சூழ மகாராணி போல் சில்வர் நிற புடவையில் நடந்து வரும் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசை குட்டி பாகிஸ்தான் என நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார். இது பெரும் புயலை ஏற்படுத்தியது. இதனால் அரசுடன் கங்கனாவுக்கு மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு நடிகை கங்கனாவுக்கு அவர் கோரியதன் பேரில் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.
இன்று எனது வீட்டை இடிக்கலாம்.. நாளை உங்கள் ஆணவம் நொறுங்கும்.. உத்தவ் தாக்கரேவுக்கு கங்கனா சவால்
11 ஆயுதப்படை
இதன் மூலம் சிஆர்பிஎஃப் கமாண்டோக்களால் பாதுகாக்கப்பட்ட முதல் பாலிவுட் நடிகை கங்கனா என்ற பெருமையை பெறுகிறார். 24 மணி நேரமும் அவரை பாதுகாக்க பணியாற்றுவார்கள். 10 முதல் 11 ஆயுத படை கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் பாதுகாப்பார்கள்.
அட்டகாசம்
இந்த நிலையில் இன்று சண்டீகரில் உள்ள மொகாலி சர்வதேச விமானத்திற்கு கங்கனா வருகை தந்தார். அப்போது அவரை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். துப்பாக்கி ஏந்திய வீரர்கள் புடைச்சூழ கங்கனா வெள்ளை நிற புடவையில் அட்டகாசமாக இருந்தார்.
தைரியம்
அவர் ஒரு மகாராணி போல் வந்த காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. போதை பொருள் விற்பனையாளர்கள், குற்றவாளிகளுக்கு எதிராக தைரியமாக நிற்கும் கங்கனாவுக்கு சல்யூட் என்கிறார் இந்த வலைஞர்.
ஜான்சி
கங்கனா நீங்கள் மன வலிமையுடன் இருங்கள். இதுபோன்ற கடினமான பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்ள மனவலிமை அவசியம் என்கிறார் இந்த வலைஞர். நீங்கள் ஜான்சிக்கு ராணி என்கிறார்கள்.