அடுத்தடுத்து தேர்தல் பிரச்சாரம்.. சித்துவின் தொண்டையில் பாதிப்பு.. ரெஸ்ட்டுக்கு உத்தரவு!
சண்டிகர்: சட்டிஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் தேர்தலுக்காக 17 நாட்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நவ்ஜோத் சிங் சித்து-விற்கு குரல்வளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு பேசி வந்ததால் அவருக்கு குரல் வளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். அந்த பாதிப்பிலிருந்து அவர் மீண்டு வர முழுமையாக 3 முதல் 5 நாட்கள் ஓய்வு தேவை என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலஅமைச்சரான சித்து 70-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளார். இது குறித்து பேசிய செய்தித் தொடர்பாளர் ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில் சித்து அதிகளவில் பயணித்ததின் விளைவாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
நட்சத்திர பேச்சாளரான சித்து சட்டிஸ்கரில் 13 கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளிலும், பின்னர் மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஆறு நாட்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.