சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரயிலில் மக்கள் சிக்கியபோதும், காப்பாற்ற முயலாமல் உரையாற்றிய சித்து மனைவி.. மக்கள் ஆவேசம்

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா விழாவில் பங்கேற்றவர்கள் மீது ரயில் மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த விழாவிற்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் அம்மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து மனைவி நவ்ஜோத் கவுர் சித்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார்.

Navjot Singh Sidhus wife continued to give a speech as people were struck down by the train in Punjab

அப்போது ராவணன் உருவ பொம்மை மீது நெருப்பு வைக்கும் முக்கிய நிகழ்ச்சி அரங்கேறியது. ஆனால், அப்போது ஏற்பட்ட தீ விபத்து விழாவில் பங்கேற்றவர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடி உள்ளனர். அப்போதுதான் வேகமாக வந்த ரயில் மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

ஆனால் இந்த விபத்து நடைபெற்று மக்கள் கூக்குரலிட்டபோது சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த மேடையில் நின்று நவ்ஜோத் கவுர் சித்து சிறப்புரையாற்றி கொண்டிருந்துள்ளார்.

ஒரு பக்கம் மக்களின் மரண ஓலம் கேட்டபோதும் அவர் தனது உரையை நிறுத்தவில்லை. உதவவும் முற்படவில்லை என்று விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து, 2012ஆம் ஆண்டு அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார். இயல்பிலேயே இவர் ஒரு மருத்துவர். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்ற பிறகு அங்கே உள்ள மக்களுக்கு உதவி செய்யாமல் கிளம்பி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

English summary
Eyewitness at Amritsar accident site says, "Congress had organised Dussehra celebrations here without permission. Navjot Singh Sidhu's wife was the chief guest at the celebrations and she continued to give a speech as people were struck down by the train."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X