சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாய நிலங்களை அபகரித்தவர்ளை சிறையில் தள்ளியே தீருவோம்... ராபர்ட் வதேராவை தாக்கிய மோடி

Google Oneindia Tamil News

சண்டிகர்: விவசாயிகளின் நிலத்தை அபகரித்தவர்களை பாஜக அரசு சிறையில் தள்ளியே தீரும் என பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அரியானாவின் பாதேகாபாத், குருசேத்திரம் மற்றும் டெல்லியின் ராம் லீலா ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

 PM Modi says will send Robert Vadra to jail if voted to power,

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், அரியானா மாநிலத்தில் விவசாயிகளின் நிலத்தை அபரித்தவர்கள் இப்போது அமலாக்கத்துறைக்கும், நீதிமன்றத்திற்கும் சென்று கொண்டிருப்பதாக ராபர்ட் வதேராவின் பெயரை கூறாமல் விமர்சனம் செய்தார்.

மேலும் நில அபகரிப்பாளர்களை சிறைக்கு அருகே கொண்டு வந்து விட்டதாக கூறிய மோடி, மத்தியில் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன், அவர்கள் சிறையில் தள்ளப்படுவது உறுதி என்றும் மோடி கூறினார்.

இவர்.. இல்லைனா அவர்.. பிரதமர் பதவிக்கு தயாராகும் 2 பெண் தலைவர்கள்.. என்ன நடக்கும்?இவர்.. இல்லைனா அவர்.. பிரதமர் பதவிக்கு தயாராகும் 2 பெண் தலைவர்கள்.. என்ன நடக்கும்?

2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த பாஜக உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்த மோடி, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.

பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த இடத்திலும் ராணுவத்தை பற்றி பேசுவதில்லை என்றும், ராணுவத்திற்கோ, ராணுவத்தை கொண்டோ எந்த சாதனையும் செய்யவில்லை என விமர்சித்தார்.

English summary
lok sabha elections 2019: PM Modi attacks Robert Vadra, will send Robert Vadra to jail if voted to power
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X