சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன்டா குடும்பத்துல 9 பேர் இருந்தும் எனக்கு 5 ஓட்டுதானா.. "அவசரப்பட்டு" குமுறி குமுறி கதறிய சுயேச்சை!

Google Oneindia Tamil News

அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் வேட்பாளர் ஒருவர் தன் குடும்பத்தில் 9 பேர் இருந்து வெறும் 5 ஓட்டுக்கள் பெற்றதால் கதறி கதறி அழுத சம்பவம் வைரலானது. ஆனால் அவர் உணர்ச்சிவசப்பட்டு அவசரப்பட்டுவிட்டார் என்பது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை பார்த்த போது தெரிந்துவிட்டது.

லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 542 தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகளில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

பொதுவாக ஒரு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என விட வேண்டும். தோல்விக்கு சிறிதாக ஒரு வருத்தப்படலாம்.

 இழுபறிக்குப்பின் திருமாவுக்கு கிடைத்த வெற்றி.. இயக்குனர் ரஞ்சித் போட்ட கலங்க வைக்கும் அந்த ட்வீட்! இழுபறிக்குப்பின் திருமாவுக்கு கிடைத்த வெற்றி.. இயக்குனர் ரஞ்சித் போட்ட கலங்க வைக்கும் அந்த ட்வீட்!

விம்மி விம்மி

விம்மி விம்மி

ஆனால் பஞ்சாப் லோக்சபா தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளர் தோல்வியுற்றதற்கு அழுதார். எப்படி விம்மி விம்மி அழுதார் தெரியுமா. சரி வாங்க விஷயத்துக்குள்ள போவோம். ஜலந்தரை சேர்ந்தவர் நீது சட்டர்ன் வாலா. இவர் சுயேச்சை வேட்பாளராக களம் கண்டார். இதையடுத்து தொகுதி முழுவதும் சுற்றித் திரிந்து வாக்கு சேகரித்தார்.

அழுத வேட்பாளர்

அழுத வேட்பாளர்

இன்று வாக்கு எண்ணிக்கையில் இவருக்கு ஏராளமான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றம்தான் விஞ்சியது. வெறும் 5 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தாதல் செய்தியாளர்களிடம் விம்மி விம்மி அழுதார்.

மோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போவது இந்த 6 தமிழக எம்.பி.க்கள்தான்.. இனிதான் ஆட்டமே! மோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போவது இந்த 6 தமிழக எம்.பி.க்கள்தான்.. இனிதான் ஆட்டமே!

எப்படி 5 ஓட்டுக்கள்

எப்படி 5 ஓட்டுக்கள்

பின்னர் அவர் கூறுகையில் எனக்கு வெறும் 5 ஓட்டுக்களே விழுந்துள்ளது. என் குடும்பத்திலேயே வாக்காளர்கள் 9 பேர் இருக்கும் போது எனக்கு எப்படி 5 வாக்காளர்கள் விழும் என கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தியாளர்கள் உங்கள் குடும்பத்திலேயே உங்களுக்கு ஆதரவு அளிக்காத நிலையில் மக்கள் ஆதரவை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என கேட்டனர்.

வெற்றி பெறக் கூடாது என சதி

வெற்றி பெறக் கூடாது என சதி

பின்னர் கண்களை துடைத்து கொண்டு ஒரு பதில் அளித்தார் பாருங்க. செய்தியாளர்களுக்கு சிரிப்பதா இல்லை இவரது அப்பாவித்தனத்தை கண்டு வருந்துவதா என தெரியவில்லை. இவர் கூறுகையில் நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்கான சதி இது.

என்ன அநியாயம் இது.. அந்த ஒரு பேச்சுதான் கனிமொழியின் அரசியலை மாற்றியது.. வெற்றி கைவசமான கதை! என்ன அநியாயம் இது.. அந்த ஒரு பேச்சுதான் கனிமொழியின் அரசியலை மாற்றியது.. வெற்றி கைவசமான கதை!

இனி போட்டியில்லை

இனி போட்டியில்லை

என் குடும்பத்தினர் எனக்குத்தான் வாக்களித்திருப்பார்கள். அப்படியிருக்கும் போது வெறும் 5 வாக்குகள் கிடைத்துள்ளது என்றால் என்ன அர்த்தம், வாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துவிட்டனர். என்னை ஏமாற்றிவிட்டனர் என்ற அவர் கடைசியாக ஒன்று சொன்னார் பாருங்க.. "இனி நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்"

856 வாக்குகளாம்

856 வாக்குகளாம்

நீது கதறி அழுத வீடியோ வைரலானது. இதையடுத்து அவர் பெற்ற வாக்குகள் எத்தனை என்பதை பார்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டதில் நீது 856 வாக்குகளை பெற்றது தெரியவந்தது. இறுதி முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னே நீது அவசரப்பட்டு தனக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்துவிட்டதாக அழுததும் தெரியவந்தது. ஜலந்தர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 19-ஆவது இடத்தை நீது பிடித்ததும் தெரியவந்தது.

ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றி பெற்ற பாரிவேந்தர்.. கடைசி நேர அதிரடியால் எம்.பி. ஆன அதிசயம்! ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றி பெற்ற பாரிவேந்தர்.. கடைசி நேர அதிரடியால் எம்.பி. ஆன அதிசயம்!

English summary
A Punjab candidate cries after he had got 5 votes though he has 9 members in his family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X