பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட 1,381 கிலோ தங்கம்.. திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைப்பு
Recommended Video
சென்னை: சென்னை அருகே தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான 1,381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
ஆவடி அருகே வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில், கடந்த 17-ம் தேதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அவ்வழியாக உரிய ஆவணங்கள் இன்றி லாரியில் கொண்டு செல்லப்பட்ட 1,381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பிடிப்பட்ட தங்கத்தை பூந்தமல்லி கருவூலத்தில் தேர்தல் பறக்குப் படையினர் ஒப்படைத்தனர்,
அமெரிக்காவை அசுர புயல் தாக்கியது... 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமானது என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்தது. பின்னர் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க உரிய ஆவணங்களை தேவஸ்தானம் வழங்கியது.
அந்த ஆவணங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 1,381 கிலோ தங்கம் தங்களுடைய தங்கம் தான் என தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த தங்கத்தை டெபாசிட் செய்திருந்ததாகவும் கூறியிருந்தனர்.
வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதற்கான தகுந்த ஆதாரங்களையும் உடன் சமர்ப்பிதிருந்தனர். இதனையடுத்து தங்கம் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 1,381 கிலோ தங்கம், திருப்பதி தேவஸ்தானத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பூந்தமல்லி கருவூலத்தில் இருந்த 1,381 கிலோ தங்கம், சாலை மார்கமாக வேன் மூலம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.