தமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்
சென்னை : தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7.81 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் முற்றிலும் ஒழிந்து விட்டதால் பழையபடி மக்கள் தங்கள் இஷ்டத்திற்கு இருக்க முடியும் என்பதால் தமிழக கொரோனா அறிக்கையை ஆவலுடன் படித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தினந்தோறும் மாநில சுகாதாரத் துறை சார்பில் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி கொரோனாவால் இன்று ஒரே நாளில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருகிறது.. ஆய்வில் தகவல்
பரிசோதனை
இதுவரை தமிழகத்தில் 7,81,915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 62,616 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,20,60,001 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அது போல் இன்று 62,131 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆண்கள், பெண்கள்
இதுவரை 1,17,69,369 பேருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என சோதனை செய்யப்பட்டது. இன்று 872 ஆண்களுக்கும், 538 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 4,72,430 ஆண்களுக்கும், 3,09,451 பெண்களுக்கும், 34 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா
இதுவரை 67 அரசு பரிசோதனை மையங்கள், 153 தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 220 கொரோனா சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7,59,206 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவால் 9 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 11,712 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள்
12 வயதுக்குள்பட்டவர்களில் 14,301 ஆண் குழந்தைகளுக்கும் 13,266 பெண் குழந்தைகளுக்கும் என மொத்தம் 27567 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,94,925 ஆண்களுக்கும், 2,58,970 பெண்களுக்கும் என மொத்தம் 6,53,929 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் 60 வயதுக்குள் மேற்பட்டவர்களில் 63204 ஆண்களுக்கும், 37215 பெண்களுக்கும் என 1,00,419 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.