சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்லதொரு மாற்றம்.. தமிழகத்தில் கொரோனா.. பாதிப்பை விட வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகம்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7.80 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் தினந்தோறும் மாநில சுகாதாரத் துறை சார்பில் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி கொரோனாவால் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1,459 were affected for Corona today in Tamilnadu

இதுவரை தமிழகத்தில் 7,80,505 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 67,145 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,19,97,385 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அது போல் இன்று 66,655 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதுவரை 1,17,07,238 பேருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என சோதனை செய்யப்பட்டது. இன்று 888 ஆண்களுக்கும், 571 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 4,71,558 ஆண்களுக்கும், 3,08,913 பெண்களுக்கும், 34 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரை முழு சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடிகொரோனாவுக்கு எதிரான போரை முழு சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி

இதுவரை 220 கொரோனா சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1,471 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7,57,750 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவால் 9 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 11,703 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.

English summary
1,459 were affected for Corona today in Tamilnadu. So far 7.80 lajkhs were affected for the deadly virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X