சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை... திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டு சிறை
சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டு, வீட்டில் வேலை செய்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது கூட்டளியான ஜெயசங்கர் என்பவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சத்யா(15). அவர் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். இந்நிலையில் அவர் திடீர் என்று மர்மமான முறையில் இறந்தார்.
உடல்நலக் குறைவால் சிறுமி இறந்ததாக ராஜ்குமார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தனது மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக சந்திரன் புகார் கூறினார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர் ஆகியோரை கைது செய்தனர். 2006-2011 வரை பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக ராஜ்குமார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.