சென்னை அண்ணா பல்கலை. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாட்டில் தற்போதைய நிலையில் 2628 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனிடையே சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மொத்தம் 160 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தற்போது வரை 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.