தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி? எந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்?
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கோவையைச் சேர்ந்தவர்கள் 28 பேராவர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.
இவர்கள் அனைவரும் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். கடந்த மாதம் நடந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் 1,1,31 பேர் தமிழகத்திற்கு திரும்பி வந்துள்ளனர். மற்றவர்கள் டெல்லியிலேயே தங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மும்பையின் தாராவி ஏரியாவில் கால் வைத்த கொரோனா.. ஒருவர் பலி.. மிகவும் அதிர்ச்சி இது.. ஏன் தெரியுமா?
110 பேர் எந்த மாவட்டத்தினர்?
- கோவை- 28
- நெல்லை- 6
- ஈரோடு- 2
- தேனி- 20
- திண்டுக்கல்- 17
- மதுரை- 9
- திருப்பத்தூர்- 7
- செங்கல்பட்டு- 7
- சிவகங்கை- 5
- தூத்துக்குடி - 2
- திருவாரூர்- 2
- கரூர்- 1
- காஞ்சிபுரம்- 2
- சென்னை- 1
- திருவண்ணாமலை - 1