1,330 குறள்களையும் சரளமாக சொல்லும் சென்னை சிறுவன்... பாராட்டு மழை
சென்னை: சென்னை அருகே 1330 திருக்குறள்களையும் ஒப்பித்து சிறுவன் அசத்தி வருகிறான்.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை மறைந்து இருக்கிறது; ஒரு சிலர் தங்களது திறமைகளை கூச்சப்படாமல் வெளிப்படுத்தி சாதனை படைக்கின்றனர்.
தற்போது பிறக்கும் குழந்தைகள், சுட்டியாக இருப்பதுடன், ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கி சாதனை படைத்து வருகின்றனர். அதில் ஒருவர் தான், எரவனநுர் ஊரை சேர்ந்த ஜீவன் ப்ரியன் அவரது மூன்று வயதிலிருந்து திருக்குறளை கற்று வருகிறார்.
அவர் 1330 குறள்களையும் தவறுயின்றி ஒப்பித்து வருகிறார். எந்த அதிகாரத்தில் இருந்தும் எந்த குரலைக் கேட்டாலும் ஜீவன் பிரியன் தெளிவாக சொல்கிறார்.
தமிழக அரசு சார்பில் ஐந்து வயதிலேயே அவர் பத்து ரூபாய் நன்கொடை பெற்று இருக்கிறார். கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற குழந்தை இலக்கிய விழாவில் பங்கு பெற்று ஜீவன் ப்ரியன் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது