பொங்கல் திருநாள்... சொந்த ஊர் திரும்பும் மக்கள்... இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இன்று மாலை முதல் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு, கேகே நகர், மாதவரம், தாம்பரம் சானடோரியத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து பொங்கலை முன்னிட்டு இன்று மாலை முதல் 4 நாட்களுக்கு 14,423 சிறப்புப் பேருந்துகளை இயக்கப்பட உள்ளது. இதற்கு முன்பதிவு செய்வதற்காக 30 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் இருந்து வெளியூருகளுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளில் 1.37லட்சம் பேர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில் இருந்து 10,000க்கும் அதிகமான சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் நெரிசலின்றி செல்ல தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது சென்னையில் மட்டும் வருமானம் 17.47 கோடி ரூபாய். இந்த ஆண்டு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.