இடைத்தேர்தலை சந்திக்க தயார்.. நாங்கள் ஜெயிப்போம்.. தினகரன் பரபர பேட்டி!
சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது, நாங்கள் இடைத்தேர்தலை சந்திக்க தயார் என்று டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது, நாங்கள் இடைத்தேர்தலை சந்திக்க தயார் என்று டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் தினகரன் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் டிடிவி தினகரன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். அதில் தீர்ப்பு குறித்து தாங்கள் அதிர்ச்சி அடையவில்லை என்று தினகரன் கூறியுள்ளார். தினகரன் பேட்டி விவரம்:
எதிர்பாராத தீர்ப்பு
நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை. ஆனால் இது எங்களுக்கு பின்னடைவு இல்லை. அரசியலில் பின்னடைவு என்று எதுவும் இல்லை. 18 பேருடன் கலந்து பேசி செயல்படுவோம்.
அடுத்து என்ன
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடனும் கலந்து பேசுவேன். எங்களுக்குள் பிளவு இல்லை, 18 பேரும் என்ன நினைக்கிறார்களோ அதை செய்வோம். இது எங்களை மேலும் ஒற்றுமைப்படுத்தும்.
18 பேரின் விருப்பத்தை ஏற்று
நாங்கள் அடுத்து செய்ய வேண்டியதை செய்வோம். எனது ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வோம். அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதை செய்வேன். நாங்கள் இடைத்தேர்தலில் நிற்போம். 18 தொகுதி மட்டுமல்லாமல் மேலும் காலியாக 2 தொகுதியிலும் நாங்கள் நிற்போம். தேர்தலில் நிற்க அமமுக தயாராகி இருக்கிறது.
துரோகி யார்
துரோகி யார் என்று மக்களுக்குத் தெரியும். தாங்கள் செய்வது பச்சைத் துரோகம் என்பதை ஆளுங்கட்சி உணர வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை வைத்து துரோகி யார் என்று முடிவு செய்ய முடியாது. சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றுதான் ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இடைத் தேர்தலை தமிழக மக்களும், அமமுகவும் எதிர்பார்த்துக் காத்துள்ளோம். இடைத் தேர்தலில் எங்களை நாங்கள் நிரூபிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.