தமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா.. 7 லட்சத்தை தாண்டிய பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 7,06,136 கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பேராகும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் எப்போதும் மாலை நேரங்களில் சுகாதாரத் துறையினால் வெளியிடப்படும். இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா குறித்த தகவல்கள் வெளியானது.
அதில் தமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 7,06,136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஒரே நாளில் பிசிஆர் மூலம் 80,237 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
விஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா.. மொத்த உலகமும் பெரும் நெருக்கடியில்.. ஹூ எச்சரிக்கை
சேம்பிள்கள்
இதுவரை 94,36,817 லட்சம் சேம்பிள்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா புள்ளி விவரங்களில் 1,711 ஆண்களும், 1,175 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 198 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கொரோனாவால் உயிரிழப்பு
இன்று ஒரே நாளில் 4,024 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,63,456 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 பேராகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,893 பேராகும்.
4 ஆயிரத்தை
இன்று ஒரே நாளில் 78,896 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 91,78,099 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 31,787 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு 4 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள்
இதுவரை 12 வயதுக்குட்பட்டவர்களில் சிறுவர்கள் 13,173 பேருக்கும் சிறுமிகள் 12006 பேருக்கும் என மொத்தம் 25179 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,58,563 ஆண்களுக்கும் 233564 பெண்களுக்கும் என மொத்தம் 594159 பேருக்கும் அது போல் 60 வயதை கடந்தவர்களில் 54504 ஆண்களுக்கும் 32294 பெண்களுக்கும் என மொத்தம் 86798 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.