ஒரே பைக்கில் 3 பேர்.. படு ஸ்பீடு.. வேகமாக வந்து மோதிய தனியார் பள்ளி பேருந்து.. 2 பேர் பலி!
பள்ளி வாகனம் மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
சென்னை: ஒரே பைக்கில் 3 பேர் ஸ்பீடாக வந்துள்ளனர்.. அப்போது எதிரே வந்த பஸ், இவர்கள் மீது மோதியதில் 2 பேர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.. ஒருவர் படுஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தாம்பரம், கேம்ப்ரோடு அருகே அகரம் சாலையில் பைக்கில் 3 பேர் வந்துள்ளனர். இதில் ஒருவன் பள்ளி மாணவன்! மாலை நேரம், டிராபிக் அதிகம் இருக்கும் என்று தெரிந்தும் பைக்கை வேகமாக ஓட்டி வந்துள்ளனர்.
அந்த சமயத்தில், பெருங்களத்தூர் ஆலப்பாக்தில் உள்ள எஸ்எஸ்எம் தனியார் பள்ளியில் இருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அகரம் வழியாக தாம்பரம் நோக்கி வந்து கொண்டு இருக்கும் போது, எதிரே ஓவர் ஸ்பீடில் வந்த பைக் மீது, ஸ்கூல் பஸ் மோதிவிட்டது. இதில் பைக்கில் வந்த 3 பேருமே தூக்கி வீசப்பட்டனர்.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்ணெதிரே நடந்த இந்த விபத்தினை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.