சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்

ஆவடியில் நரிக்குறவ பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நரிக்குறவர் பெண்ணை சீரழித்து கொலைசெய்த கும்பல்-வீடியோ

    சென்னை: நரிக்குறவர் பெண் ரோஜாவை கற்பழித்து கொன்றதுடன், அதற்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையையும் தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை ஆவடி உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் காவலர் குடியிருப்பு அருகே நரிகுறவர் காலனி ஒன்று உள்ளது. இங்கு நரிகுறவர் இனத்தை சேர்ந்த தம்பதிதான் அருள் பாண்டியன்-ரோஜா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன், 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார்கள். ரோஜாவுக்கு 22 வயதாகிறது.

    இவர்களின் வேலையே ரோட்டோரம் ஊசி மணி விற்பதுதான். இப்போது பொங்கல் பண்டிகை என்பதால், ஊசிமணிகளை விற்க அருள் பாண்டி மகனை அழைத்து கொண்டு திருத்தணி சென்றுவிட்டார்.

    கல்லை போட்டு கொலை

    கல்லை போட்டு கொலை

    இந்நிலையில் நேற்றிரவு பெண் குழந்தையுடன் ரோஜா தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் ரோஜாவை கற்பழித்தனர். பிறகு அவரது தலையில் கல்லை போட்டு கொலையும் செய்தனர்.

    அலங்கோலம்

    அலங்கோலம்

    இதற்கு இடையூறாக இருந்த பெண் குழந்தையின் தலையிலும் கல்லை போட்டு கொன்று அவர்கள் தப்பி சென்றுவிட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரர் ரோஜா வீட்டிற்கு இன்று காலை சென்றபோதுதான், அவரது உடை அலங்கோலமாக இருப்பதும், தாயும்-மகளும் கொலை செய்யப்பட்டு கிடப்பதும் கண்டு அதிர்ச்சி ஆனார்கள்.

    4 பேரிடம் விசாரணை

    4 பேரிடம் விசாரணை

    உடனடியாக இது சம்பந்தமாக போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அம்பத்தூர் போலீசார் உடல்களை கைப்பற்றினர். இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே பகுதியில் வசித்து வந்த விஜய், ராஜ்கமல், வீரகுமார், தீபன், ஆகிய நான்கு பேரை பிடித்து அவர்களிடம் விசாரணையை ஆரம்பித்தனர்.

    சிறையில் அடைப்பு

    சிறையில் அடைப்பு

    இவர்கள் 4 பேருக்குமே வயது 22-க்குள் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதில் ரோஜாவை கற்பழித்து, மகளுடன் சேர்த்து கொன்றதை வீரகுமார் என்பவர் ஒப்பு கொண்டார். இதையடுத்து, வீரகுமார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Narikuravar Mother and baby murder near Avadi in Chennai. The police arrested the man who had committed two murders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X