ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை!
கணவனை துப்பட்டாவால் இறுக்கி கொன்ற மனைவி உட்பட 2 பேர் கைதாகி உள்ளனர்
Recommended Video
சென்னை: புருஷனை துப்பட்டாவால் இறுக்கியும், தலைகாணியால் முகத்தை அமுக்கியும் கொலை செய்துவிட்டு, மீன் வாங்க மார்க்கெட் போய் விட்டார் காயத்ரி! சென்னையில்தான் இந்த கள்ளக்காதல் கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது!
சென்னை கோயம்பேடு நெற்குன்றம் சக்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். 28 வயசாகிறது. ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அதாவது நாகராஜின், காது, மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் பிணமாகி கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் பறந்த நிலையில், உடனடி விசாரணை ஆரம்பமானது.
வீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா? கொந்தளிக்கும் பாஜக நாராயணன்
காயத்ரி
நாகராஜ் உடலை கைப்பற்றியை கோயம்பேடு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் நாகராஜ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர், முதல் விசாரணையே நாகராஜ் மனைவி காயத்ரியிடம்தான். "என் புருஷன் தற்கொலை செய்துக்கிட்டார்" என்று போலீசாரிடம் அழுது ஒப்பாரி வைத்தார் காயத்ரி.
கள்ளக்காதல்
போலீசாரோ, தங்கள் பாணியில் விசாரணை நடத்திய பிறகுதான், காயத்ரி எல்லா உண்மையையும் சொல்ல ஆரம்பித்தார். "எனக்கும், என் புருஷனின் நண்பர் மகேந்திரனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இது என் புருஷனுக்கு தெரிஞ்சு போயிடுச்சு. அதனால எங்களுக்குள்ள வீட்டில் தகராறு இருந்து வந்தது.
புருஷன்
அப்போது கோபத்தில் மகேந்திரனை தீர்த்துகட்டுவதாக சொன்னார். இந்த விஷயம், மகேந்திரனின் மனைவி பானுக்கு தெரிந்துவிட்டது. அதனால் நானும், பானுவும், சேர்ந்து என் புருஷனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். வீட்டில் தூங்கி கொண்டிருந்த நாகராஜை தலைகாணியால் முகத்தை அமுக்கினோம். என் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். நாகராஜ் எங்கள் கண்முன்னே இறந்துவிட்டார்.
மீன் மார்க்கெட்
இதுக்கப்புறம், நான் எதுவுமே தெரியாதது போல் மீன் வாங்க வானகரம் மீன் மார்கெட் சென்றதாக நாடகமாடினேன்" என்றார். இதையடுத்து, காயத்திரியையும்,பானுவையும் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி, மற்றும் கள்ளக்காதலனின் மனைவி சேர்ந்து ஒருவரை கொலை செய்த சம்பவம் சென்னையை அதிர வைத்துள்ளது.