சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Shock crimes 2019: கள்ளக்காதலியின் 3 மகள்களை கொன்று.. சடலங்களுடன் உறவு.. 4 ஆயுள் தண்டனை!

சைக்கோ நபருக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    Man got 4 life sentenced by Chennai High Court

    சென்னை: எத்தனையோ கொலைகள் தமிழகத்தில் நடந்தாலும்... சில சைக்கோ கில்லர்களின் கொலைகள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.. அதில் சென்னை கொடூரம்.. கள்ளக்காதலியின் 3 மகள்களை கொன்று, அந்த சடலங்களுடன் உறவு வைத்த கொடூரனுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கிய மகளா கோர்ட்டின் உத்தரவு மறக்க முடியாத ஒன்றாகும்!

    காரைக்குடியை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவரது கணவர் சின்னராஜ். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர். 3 பெண் குழந்தைகள் உள்ளதால், அவர்களை காப்பாற்ற பழனியில் உள்ள பேக்கரியில் பாண்டியம்மாள் வேலை செய்து வந்தார்.

    அப்போது உதயன் என்ற இளைஞருடன் கள்ள உறவு ஏற்பட்டது. இந்த உறவு தீவிரமானதால், பாண்டியம்மாள் தனது 3 பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, சென்னை ராயப்பேட்டையில் உதயனுடன் தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பித்தார். சென்னையில் ஒரு ஸ்வீட் கடைக்கு ஸ்வீட் சப்ளை செய்துவந்த உதயன் குடும்ப செலவுகளையும் கவனித்து வந்தான்.

    உதயன்

    உதயன்

    ஆனால் நாளடைவில், பாண்டியம்மாளின் 3 பெண் குழந்தைகளுக்கும் உதயன் பாலியல் தொல்லை தர ஆரம்பித்துள்ளான். இதை பாண்டியம்மாளே நேரடியாக பார்த்து, உதயனை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதைதவிர 3 பெண்களில் ஒரு மகளை கட்டித்தரவேண்டும் என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.

    ஆத்திரம்

    ஆத்திரம்

    மகள்களை நாசம் செய்வதை பொறுக்க முடியாத பாண்டியம்மாள், உதயன் உறவை துண்டித்தார். வீட்டுக்குள்ளும் சேர்க்கவில்லை. இதில் உதயனுக்கு பாண்டியம்மாள் மீது ஆத்திரம் வந்தது. அதனால் அவரையும், 3 பெண்களையும் கொலை செய்ய முடிவு செய்தான்.

    போஸ்ட் மார்ட்டம்

    போஸ்ட் மார்ட்டம்

    அதன்படி கடந்த 2016ம் ஆண்டு, ஜுன் 25-ம் தேதி, திடீரென வீட்டுக்குள் நுழைந்த உதயன், உலக்கையால், பாண்டியம்மாள், 3 பெண்களையும் அடித்து கொலை செய்தான். பிறகு அந்த 3 பெண் குழந்தை சடலங்களுடனும் உறவு கொண்டுள்ளான். இந்த சம்பவம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான் தெரியவந்தது. இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் உதயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    4 ஆயுள் தண்டனை

    4 ஆயுள் தண்டனை

    இந்த வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு கூறப்பட்டது. உதயன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 4 கொலை வழக்குகளில் 4 ஆயுள் தண்டனைகள் விதித்தும், அந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறி நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளித்தார்.

    உதயனை தூக்கில் போடுங்க என்று பாண்டியம்மாளின் குடும்பத்தினர் அன்று கதறி துடித்த நிலையில், 4 ஆயுள் தரப்பட்ட தீர்ப்பானது இந்த வருடம் வழங்கிய மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது

    English summary
    2019 Year Ender crime stories: phycho killer murder lady and her 3 daughters, and he got 4 life sentence
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X