சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனி பெட்ரூம்.. நிர்வாண போட்டோ.. விதவிதமான வீடியோக்கள்.. 2019ஐ அதிர வைத்த சஞ்சனா டீச்சர்!

டியூஷன் டீச்சர் சஞ்சனா கைது சம்பவம் மறக்க முடியாத ஒன்றாகும்

Google Oneindia Tamil News

சென்னை: நம்பி படிக்க வந்த பள்ளி மாணவிகளையே தன் காதலனுக்கு விருந்தாக்கி மகிழ்ந்தவர் சஞ்சனா டீச்சர்.. எத்தனையோ சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தாலும், படித்த பட்டதாரியான இந்த பெண்ணின் செயல் கடுமையான அதிர்ச்சியை இந்த வருடம் மக்களுக்கு ஏற்படுத்தியதை மறந்துவிட முடியாது.

சென்னை தி.நகரை சேர்ந்தவர் சஞ்சனா என்ற 28 வயது பெண் பட்டதாரி, வீட்டிலேயே டியூசன் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இதில், 10,11, 12ம் என 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஒரு மாணவி டியூஷன் முடிந்து வீட்டுக்கு வந்தபோது, அவரது முகம் களைப்புடன் காணப்பட்டது.. ஆடைகள் கலைந்திருந்தது.. முகமெல்லாம் அழுது வீங்கியிருந்தது... அந்த கோலத்தை பார்த்ததுமே பெற்றோர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. அதனால், மகளிடம் வந்து இதை பற்றி விசாரித்தனர்.

பாலாஜி

பாலாஜி

அப்போதுதான் சஞ்சனா டீச்சரின் வண்டவாளம் வெளிச்சத்துக்கு வந்தது.. பெற்றோர் போலீசுக்கு போனார்கள்.. புகார் தந்தார்கள்.. போலீசாரும் விஷயத்தில் தீவிரமாக இறங்கியபோதுதான் டீச்சரின் வேலைகள் அம்பலமாயின. டீச்சர் சஞ்சனா பாலாஜி என்பவரை காதலித்துள்ளார்.. அந்த பாலாஜிக்கு எந்த வேலை வெட்டியும் இல்லை.. ஒரு கட்டத்தில் டீச்சரின் காதலும் அவருக்கு கசந்துவிடவும், கழட்டிவிட முயன்றுள்ளார்.

டியூஷன் பிள்ளைகள்

டியூஷன் பிள்ளைகள்

ஆனால் பாலாஜியின் காதலை இழக்க டீச்சருக்கு மனசு இல்லை.. அதனால் காதலை இழக்காமல் இருக்க, என்ன வேண்டும், தான் என்ன செய்ய வேண்டும் என்று பாலாஜியிடம் சஞ்சனா கேட்டுள்ளார். அப்போதுதான் டியூஷன் படிக்க வரும் மாணவிகளை தனக்கு விருந்தாக தர வேண்டும் என்று சொல்லி உள்ளார். இதற்கு பிறகு சஞ்சனா டீச்சரின் போக்கு மாறி உள்ளது.

வீடியோக்கள்

வீடியோக்கள்

அந்த டியூசன் சென்டரிலேயே படுக்கை அறை ஒன்றை இதற்கென ஸ்பெஷலாக ரெடி பண்ணி உள்ளார் சஞ்சனா. அழகாக இருக்கும் மாணவ, மாணவிகளை செலக்ட் செய்து, அவர்களை ஒன்றாக சேர்த்து அந்த பெட்ரூமில் நிர்வாணமாக நிற்க வைத்து டிசைன் டிசைனாக போட்டோக்களை எடுத்துள்ளார். 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை டீச்சர் இப்படி நிர்வாணமாக வீடியோ, போட்டோ எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

மிரட்டி எடுத்த அந்த வீடியோவை காட்டி அதே மாணவிகளை திரும்பவும் மிரட்டி தன்னுடன் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்தி உள்ளனர். மாணவ, மாணவிகளின் நிர்வாண படங்களும், ஆபாச வீடியோக்களும் இருந்ததை கண்டு போலீசாரே அதிர்ந்து போய்விட்டனர்.

பலாத்காரம்

பலாத்காரம்

முதன் முதலில் ஒரு மாணவியை, ஈசிஆர் ரோட்டில் உள்ள ஒரு சொகுசு பங்களாவுக்கு கல்வி சுற்றுலா என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர்.. அதுதான் பாலாஜியின் முதல்வேட்டை.. மாணவியை பாலாஜி பலாத்காரம் செய்து, அதை வீடியோவும் எடுத்து, அந்த வீடியோவை காட்டி மாணவியிடம் பணம் கேட்டார். இந்த மாதிரி வேறு சில மாணவிகளை ஏமாற்றி, பெட்ரூமுக்கு அழைத்து சென்று, வீடியோ, போட்டோக்களை எடுத்து பணம் பறித்தார் பாலாஜி.

போக்சோவில் கைது

போக்சோவில் கைது

போலீஸ் விசாரணையில் இவ்வளவும் தெரியவந்ததையடுத்து, வன்புணர்ச்சியில் ஈடுபடுதல், பாலியல் வன்கொடுமை, மிரட்டி வழிப்பறி செய்தல், மரண பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்தல், துன்புறுத்துதல், மிரட்டி அவமதித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு இருவரையும், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பாடம் சொல்லி தரும் படித்த பெண்களை நம்பி டியூசனுக்கு அனுப்பினால் இந்த கதியா என்று பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்ட கலக்கம் இன்னமும் அடங்கவில்லை.

English summary
2019 Year Ender crime stories: tuition teacher sanjana and his lover arrested under pocso in chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X