தமிழகத்தில் 9 புதிய மாவட்டங்களில் 24 சட்டசபைத் தொகுதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் சட்டசபைத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 24 சட்டசபைத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் ஆணையம் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகும் என்றும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தது.
இதனிடையே தமிழகத்தில் 9 புதிய மாவட்டங்களில் சட்டமன்றத் தொகுதிகளை தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த 9 மாவட்டங்களில் புதிய சட்டசபைத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம்
செங்கல்பட்டு மாவட்டம்: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர்
அமெரிக்க அதிபர் தேர்தல் ரிசல்ட் என்னவாகும்? மாற்றங்கள் வருமா.. உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்
வேலூர் மாவட்டம்: காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழ்வைத்தியனாங்குப்பம்
ராணிப்பேட்டை மாவட்டம்: அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு
திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்
விழுப்புரம் மாவட்டம்: செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்: உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி)
நெல்லை மாவட்டம்: நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்
தென்காசி மாவட்டம்: சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம்