24 கிலோ தங்கம் பறிமுதல்... சென்னை விமான நிலையத்தில் இருவர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம், வைரம், போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட உயிரினங்கள் என கடத்தி வந்து சிலர் வியாபாரம் செய்கின்றனர்.
அந்த வகையில், விமானம் மூலம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் கடும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தென்கொரியாவைச் சேர்ந்த இருவரின் உடைமைகளை சோதனை செய்த போது 24 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 8 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tamil Nadu: Air Intelligence Unit (AIU) of Chennai Customs seized 24 kg gold worth Rs. 8 crore at Chennai Airport, today. Two South Korean nationals detained. Further investigation underway. pic.twitter.com/olpFg7mW5M
— ANI (@ANI) January 12, 2019
வேறு யாருக்கும் இந்த கடத்தலில் தொடர்புள்ளதா என கைது செய்யப்பட்ட இருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.