தமிழக பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. 2506 மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி
சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிய 2506 மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள்: 94.80% தேர்ச்சி; மாணவர்கள்: 89.41% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வை, 2835 மாற்றுத் திறனாளிகள் எழுதியிருந்தனர். அதில், 2506 மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகள் 85.94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைக் கைதிகள் 62 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 50 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பிளஸ் 2 இறுதி நாள் தேர்வு எழுதாதவர்கள் கவனத்துக்கு.. மறுதேர்வுக்கு ஹால் டிக்கெட் வாங்குவது எப்படி
மார்ச் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. மாணவிகள் 94.80 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 89.4 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநில அளவில் முதல் இடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் 96.9 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தின் 2வது மாவட்டமாக விளங்குகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் 3வது இடத்தை பிடித்துள்ளது.
குறைந்தபட்சமாக கடலூர் மாவட்டம் 77.7 4 சதவீதம் பெற்று மாநிலத்தின் கடைசி இடத்தில் உள்ளது. மானிய உதவி பெறும் அரசுப் பள்ளியில் 84.68 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆக உள்ளது.