28 ஆண்டுகளே போதும்... இனி கொடுமை வேண்டாம்.. டிரென்டாகும் எழுவர் விடுதலை #28YearsEnoughGovernor
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் அது குறித்து ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.
எனவே 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் என்று கோரி #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
|
விடுதலை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடுகின்றனர். இனியும் அவர்களின் கொடுமை தொடரக்கூடாது. அமைச்சரவைப் பரிந்துரைப்படி அவர்களை ஆளுனர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
|
விடுதலை செய்யுங்கள்
7 தமிழர்களையும் இப்போதே விடுதலை செய்யுங்கள்
|
அற்புதம்மாள்
காத்திருக்கிறார் அற்புதம்மாள் ... அறிவண்ணன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்க ஆளுநரே !
|
விடுதலை செய்
எழுவரையும் விடுதலை செய்.!
|
சிறை வைப்பதே தீர்வாகாது
ஆளுநர் அவர்களே சிறை வைப்பதே தீர்வாகாது. எது தேவையோ அதை செய்யுங்கள்
|
வாழவிடுங்கள்
போதும் போதும். அவர்களை வாழவிடுங்கள். இந்த ஹேஷ்டேக் ஆளுநரை சென்றடையும் வரை பகிருங்கள் நண்பர்களே