தொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி
சென்னை: தமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 6.94 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் எப்போதும் மாலை நேரங்களில் சுகாதாரத் துறையினால் வெளியிடப்படும். இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா குறித்த தகவல்கள் வெளியானது.
அதில் தமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 6,94,030 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஒரே நாளில் பிசிஆர் மூலம் 80,371 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
விழாக்காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - மோடி வேண்டுகோள்
194 கூடங்கள்
இதுவரை 91 லட்சம் சேம்பிள்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா புள்ளி விவரங்களில் 1,830 ஆண்களும், 1,264 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 194 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கொரோனா பலி
இன்று ஒரே நாளில் 4,403 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,46,555 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 பேராகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,741 பேராகும்.
கொரோனா பரிசோதனை
இன்று ஒரே நாளில் 78,903 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 88,58,983 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 36,734 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் இன்று 3-ஆவது நாளாக 4 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள், பெண்கள்
இதுவரை 12 வயதுக்குட்பட்டவர்களில் சிறுவர்கள் 13,170 பேருக்கும் சிறுமிகள் 11,905 பேருக்கும் என மொத்தம் 25075 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,51,831 ஆண்களுக்கும் 231048 பெண்களுக்கும் என மொத்தம் 582911 பேருக்கும் அது போல் 60 வயதை கடந்தவர்களில் 54045 ஆண்களுக்கும் 31999 பெண்களுக்கும் என மொத்தம் 86044 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.