தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு குட் நியூஸ் இருக்கே!
சென்னை: தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை விட குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் எப்போதும் மாலை நேரங்களில் சுகாதாரத் துறையினால் வெளியிடப்படும். இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா குறித்த தகவல்கள் வெளியானது.
அதில் தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 6,90,936 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஒரே நாளில் பிசிஆர் மூலம் 85,130 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வார்டில் பாலிவுட் பாட்டுக்கு சூப்பர் டான்ஸ் ஆடும் டாக்டர்.. வைரல் வீடியோ
192 பரிசோதனை கூடங்கள்
இதுவரை 90 லட்சம் சேம்பிள்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா புள்ளி விவரங்களில் 2095 ஆண்களும், 1,441 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 192 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கொரோனா பலி
இன்று ஒரே நாளில் 4,515 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,42,152 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 பேராகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,691 பேராகும்.
கொரோனா பரிசோதனை
இன்று ஒரே நாளில் 83,625 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 87,80,080 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 38,093 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் இன்று 2-ஆவது நாளாக 4 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள், பெண்கள்
இதுவரை 12 வயதுக்குட்பட்டவர்களில் சிறுவர்கள் 13,169 பேருக்கும் சிறுமிகள் 11,904 பேருக்கும் என மொத்தம் 25073 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,50,015 ஆண்களுக்கும் 2,29,789 பெண்களுக்கும் என மொத்தம் 5,79,836 பேருக்கும் அது போல் 60 வயதை கடந்தவர்களில் 54032 ஆண்களுக்கும் 31995 பெண்களுக்கும் என மொத்தம் 86027 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.