சொகுசு காருக்குள் 3 ஆண்கள்.. 2 பெண்கள்.. விடிய விடிய கசமுசா.. அள்ளி கொண்டு போன போலீஸ்!
பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
சென்னை: ராத்திரி நேரத்தில் ஒரு சொகுசு காருக்குள் 3 ஆண்கள், 2 பெண்களும் கசமுசாவில் ஈடுபட்டதை அடுத்து, போலீசார் மொத்த பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி பகுதியில் ஒரு சொகுசு கார் ரொம்ப நேரமாக நிற்பதாகவும், அந்த காருக்குள் பாலியல் தொழில் நடைபெறுவதாகவும் வேளச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது... அது ராத்திரி நேரம் என்பதால், போலீசார் உடனடியாக பிரதான சாலையில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போதுதான் அங்கே அந்த காரை கண்டனர்.. சொகுசு கார் பக்கத்தில் இன்னொரு காரும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருக்கவும், புகார் வந்தது அந்த காரை பற்றிதான் என்று சந்தேகித்து, அங்கு சென்றனர்.. காருக்குள் 2 பெண்கள் இருந்தனர். மற்றொரு காரில் 3 ஆண்கள் இருந்தனர். எல்லாருமே விபச்சாரத்தில்தான் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சேர்ந்த மோகன் 33, சுந்தர் 28, ராஜேஷ் 31 என தெரியவந்தது. இவர்கள்தான் புரோக்கர்களாம்.. சொகுசு காரில் பெண்களை விபச்சரம் செய்ய விட்டுவிட்டு, பக்கத்திலேயே இன்னொரு காரில் இவர்கள் உட்கார்ந்து கொள்வார்களாம்.
கமலா ஹாரிஸ் தாத்தாவும் எங்க தாத்தாவும் சொந்தமாக்கும்.. பிரபல தமிழ் நடிகை கலாய் ட்வீட்!
இதைதவிர, சில பெண்களை கோவிலம்பாக்கத்தில் ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்திருப்பதாகவும் கூறினர். உடனே அந்த வீட்டுக்கு போலீசார் சென்று பார்த்தபோது, அங்கே 5 பெண்கள் இருந்தனர்.. அவர்கள் அனைவரையும் மீட்டனர்.. இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் தொழில் நடத்திய 3 இளைஞர்களை கைது செய்தனர்... அத்துடன் மீட்கப்பட்ட பெண்களையும் காப்பகத்தில் கொண்டு போய் சேர்த்தனர்.