தமிழகம் முழுக்க.. 34 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்.. பல மாவட்டங்களுக்கு புது எஸ்பிக்கள்
சென்னை: தமிழகத்தில் 34 ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில், இடமாற்றம் செய்து அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மதுரை, நெல்லை, கோவை, தேனி, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் எஸ்.பி., உட்பட 34 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை சட்டம் ஒழுங்கு கமிஷனராக இருந்த பெருமாள் , விருதுநகர் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். வருண் குமார், ராமநாதபுரம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர துணை கமிஷனராக பழனிக்குமார், மதுரை சட்டம் ஒழுங்கு துணைகமிஷனராக இருந்த சசிகுமார் நீலகிரி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக வட கிழக்கு இந்தியா மாற்றப்படும்: தாய்லாந்தில் மோடி அதிரடி
மதுரை மதுவிலக்கு எஸ்பியாக ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ்பியாக இருந்த அருண் சக்திகுமார் புதுக்கோட்டை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணன் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று புளியந்தோப்பு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். யில்வே துறை எஸ்பியாக செந்தில்குமார், வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையராக பழனிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.