சென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்!
சென்னை: சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகரில் பாதிப்பு 500-ஐ விட குறைவாகவே பாதிப்பு இருக்கிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில் அண்மைக்காலமாக குறைந்து வருகிறது.
சென்னையில் 382 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் செங்கல்பட்டில் 77 பேருக்கும், கோவையில் 140 பேருக்கும் கடலூரில் 24 பேருக்கும், தருமபுரியில் 9 பேருக்கும், திண்டுக்கல்லில் 15 பேருக்கும், ஈரோட்டில் 48 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அது போல் காஞ்சிபுரத்தில் 53 பேருக்கும், நீலகிரியில் 25 பேருக்கும் நாமக்கல்லில் 27 பேருக்கும் சேலத்தில் 88 பேருக்கும் தஞ்சையில் 32 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
திருச்சியில் 27 பேருக்கும் வேலூரில் 31 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து இன்று 419 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அடுத்தபடியாக கோவையில் 131 பேர் வீடு திரும்பினர். செங்கல்பட்டில் இன்று மட்டும் 131 பேர் கொரோனாவிலிருந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் மொத்தம் 216496 பேருக்கும் அரியலூரில் 4,574 பேருக்கும் செங்கையில் 47888 பேருக்கும், கோவையில் 49,151 பேருக்கும், கடலூரில் 24,285 பேருக்கும் தருமபுரியில் 6110 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 27790 பேருக்கும், நாமக்கல்லில் 10506 பேருக்கும் சேலத்தில் 30095 பேருக்கும், தஞ்சாவூரில் 16,488 பேருக்கும் தேனியில் 16520 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.