சென்னையில் 39.46 லட்சம் வாக்காளர்கள்.. வேளச்சேரியில் அதிக வாக்காளர்கள், துறைமுகத்தில் குறைவு
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதியில் மொத்தம் 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சத்து 06,638 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் கடந்த வருடம் 23ம் தேதி முதல் கடந்த ஜனவரி 22ம் தேதி வரை நடைபெற்றது.
அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்ற தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.
வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.. தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள்! சோழிங்கநல்லூருக்கு முதலிடம்
2020ம் ஆண்டிற்கான வாக்காளர் இறுதிப்பட்டியல் மற்றும் துணைப்பட்டியல் தயார் செய்யப்பட்டு, இன்று, மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷால் வெளியிட்டப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள்தான் சென்னையில் அதிகமாக உள்ளனர்.
19 லட்சத்து 43 ஆயிரத்து 556 ஆண் வாக்காளர்களும், 20 லட்சத்து 2 ஆயிரத்து 223 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 1013 பேர் மூன்றாம் பாலின பிரிவினர் உள்ளனர். அதிக வாக்காளர் கொண்ட பெரிய தொகுதி வேளச்சேரி. குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி துறைமுகம் இடம் பெற்றுள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களது எண்ணிக்கை என்பது கடந்த 23ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட 58,119 அதிகமாகும்.
இந்த பட்டியலில் திருவள்ளூர் மாவட்டத்தை உள்ளடக்கிய, மதுரவாயல், ஆவடி, மாதவரம் போன்ற பல சென்னை நகர பகுதி தொகுதிகள் வராது என்பது குறிப்பிடத்தக்து.