சென்னையில் தலைகீழாக மாறிய நிலை.. நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு
சென்னை: சென்னையில் இன்று 397 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகரில் பாதிப்பு 500-ஐ விட குறைவாகவே பாதிப்பு இருக்கிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,428 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில் அண்மைக்காலமாக குறைந்து வருகிறது.
சென்னையில் 397 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் செங்கல்பட்டில் 83 பேருக்கும், கோவையில் 142 பேருக்கும் கடலூரில் 21 பேருக்கும், தருமபுரியில் 16 பேருக்கும், திண்டுக்கல்லில் 31 பேருக்கும், ஈரோட்டில் 47 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அது போல் காஞ்சிபுரத்தில் 61 பேருக்கும், நீலகிரியில் 25 பேருக்கும் நாமக்கல்லில் 31 பேருக்கும் சேலத்தில் 99 பேருக்கும் தஞ்சையில் 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
திருச்சியில் 26 பேருக்கும் வேலூரில் 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து இன்று 495 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அடுத்தபடியாக கோவையில் 77 பேர் வீடு திரும்பினர். செங்கல்பட்டில் இன்று மட்டும் 101 பேர் கொரோனாவிலிருந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?.. குறைஞ்சிகிட்டே வருது!.. கலக்கல்
சென்னையில் மொத்தம் 216119 பேருக்கும் அரியலூரில் 4,570 பேருக்கும் செங்கையில் 47790 பேருக்கும், கோவையில் 49,010 பேருக்கும், கடலூரில் 24,260 பேருக்கும் தருமபுரியில் 6102 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 27758 பேருக்கும், நாமக்கல்லில் 10478 பேருக்கும் சேலத்தில் 30006 பேருக்கும், தஞ்சாவூரில் 16,488 பேருக்கும் தேனியில் 16,604 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.