சென்னையில் குறையும் கொரோனா.. 3 இலக்கமான மாயம்.. மாவட்டங்களில் நிலவரம் என்ன?
சென்னை: சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகரில் பாதிப்பு 500-ஐ விட குறைவாகவே பாதிப்பு இருக்கிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில் அண்மைக்காலமாக குறைந்து வருகிறது.
சென்னையில் 398 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் அரியலூரில் 2 பேருக்கும் செங்கல்பட்டில் 80 பேருக்கும், கோவையில் 148 பேருக்கும் கடலூரில் 26 பேருக்கும், தருமபுரியில் 10 பேருக்கும், திண்டுக்கல்லில் 26 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அது போல் காஞ்சிபுரத்தில் 58 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 7 பேருக்கும் நீலகிரியில் 37 பேருக்கும் நாமக்கல்லில் 28 பேருக்கும் சேலத்தில் 78 பேருக்கும் தஞ்சையில் 32 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. வேலூரில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நல்லதொரு மாற்றம்.. தமிழகத்தில் கொரோனா.. பாதிப்பை விட வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகம்!
சென்னையில் மொத்தம் 2,14,976 பேருக்கும் அரியலூரில் 4,562 பேருக்கும் செங்கையில் 47471 பேருக்கும், கோவையில் 48,572 பேருக்கும், கடலூரில் 24,200 பேருக்கும் தருமபுரியில் 6057 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 27628 பேருக்கும், நாமக்கல்லில் 10386 பேருக்கும் சேலத்தில் 29,796 பேருக்கும், தஞ்சாவூரில் 16,385 பேருக்கும் தேனியில் 15,581 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.