டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 3 மாணவர்கள், ஒரு இடைத்தரகர் என மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப் 4 தேர்வு முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த தாசில்தார்கள் உட்பட 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனை சிபிசிஐடி போலீசார் பல்வேறு மாவட்டங்களில் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 மாணவர்கள் மற்றும் ஆவடியை சேர்ந்த இடைத்தரகர் வெங்கட்ராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள்.
நாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்
இதனையடுத்து குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் கைதானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.